கோவை ஆவினில் பொருட்களை பணம் வாங்காமல் விற்பனை செய்து மோசடி - இரண்டு பேர் பணியிடை நீக்கம் - அமைச்சர் நடவடிக்கை

மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், ஆவின் உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித்குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் தலைமை பால் நிறுவனத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பொருட்கள் இருப்பு, விற்பனை குறித்த கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த போது, ரூ.90 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பணம் வாங்காமல் விற்பனை செய்யப்பட்டதும், இது குறித்த வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸில் விசாரணை உள்ளது குறித்து விசாரணை மேற்கொண்டார்.

பின்னர், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்ட நிலையில், ஆவின் உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித்குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே 30 ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, பணி நிரந்தரம் செய்ய பெறப்பட்ட ரூ.8.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு முதுநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...