ரேஸ்கோர்ஸ் சாலையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு - மாநகராட்சி ஆணையாளர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாதை மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபாதை தளம், பூங்காக்கள், மிதிவண்டி தளம், வண்ணமிகு விளக்குகள் போன்ற வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மிதிவண்டி பாதைக்கு கீழே மழைநீர் வடிகால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிக்கும் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.



ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் அதிகம் வழிந்தோடும் பகுதியில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பம் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட பகுதியில், சேகரமாகும் மழைநீர் இத்த வடிகால் வழியாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, பின்னர் அதற்காக அமைக்கப்படும் சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று சுத்தமாகி நிலத்திற்குள் மீண்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மழைநீர் சேமிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது, என்று மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...