நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை கொடுக்கும் நபராக மக்களின் மனதில் ஒருமித்த தேர்வாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள் - எஸ்.பி. வேலுமணி.
கோவை: அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வார காலமாக ஒற்றை தலைமை குறித்தான விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில்.பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வந்தால் யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது குறித்து இ.பி.எஸ் ஒ.பி.எஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.
கூட்டத்தில், கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இ.பி.எஸ் க்கு ஆதரவாக நின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாய் குடி கொண்ட தெய்வமாய் உள்ள எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர்களின் கழகமாக மாற்றினார் ஜெயலலிதா.
தற்போது நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை கொடுக்கும் நபராக மக்களின் மனதில் ஒருமித்த தேர்வாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று அவர் வரும் வழியெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியை கட்டிக்காத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, தமிழக மக்களின் விடிவெள்ளியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வாழும் காலத்தில் வரலாறு படைக்கும் நபராக உள்ளார். இந்த கூட்டத்தில், பங்கேற்ற அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய எழுச்சி தான் திமுக ஆட்சிக்கான சாவு மணியாக இருக்கும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆவார். அனைத்து தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான தேர்வு. அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும்", என்று பேசினார்.
கூட்டத்தில், கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இ.பி.எஸ் க்கு ஆதரவாக நின்றனர். இந்நிலையில், நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக மக்களின் இதயங்களில் நிரந்தரமாய் குடி கொண்ட தெய்வமாய் உள்ள எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர்களின் கழகமாக மாற்றினார் ஜெயலலிதா.
தற்போது நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை கொடுக்கும் நபராக மக்களின் மனதில் ஒருமித்த தேர்வாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்று அவர் வரும் வழியெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியை கட்டிக்காத்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது, தமிழக மக்களின் விடிவெள்ளியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வாழும் காலத்தில் வரலாறு படைக்கும் நபராக உள்ளார். இந்த கூட்டத்தில், பங்கேற்ற அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய எழுச்சி தான் திமுக ஆட்சிக்கான சாவு மணியாக இருக்கும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக ஆவார். அனைத்து தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான தேர்வு. அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும்", என்று பேசினார்.