'கல்லூரி கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை'- கோவையில் தனியார் கல்லூரியின் முன்பு மாணவர்கள் போராட்டம்..!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தியும், எந்தவித முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் முழுமையாக கல்லூரி கட்டணங்கள் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை என தனியார் கல்லூரியின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்துள்ள இந்த தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இன்று முதல் இந்த கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முறையாகக் கல்வி கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை என 65-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தியும், எந்தவித முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கல்லூரிக்கு காலதாமதத்தினால் வரும் மாணவர்களுக்கு வருகைப் பதிவு நோட்டில் தாங்கள் வரவில்லை என பதிவு செய்து அபராத கட்டணங்களை வசூல் செய்வதாகவும், கல்லூரியின் முழு கட்டணங்களைச் செலுத்தினால் ஹால் டிக்கெட் தருவதாகக் கூறி முழுமையாக கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை எனவும், இன்று நடந்த தேர்வு தங்களால் எழுத முடியவில்லை, இதனால் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...