'கல்லூரி கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை'- கோவையில் தனியார் கல்லூரியின் முன்பு மாணவர்கள் போராட்டம்..!

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தியும், எந்தவித முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் முழுமையாக கல்லூரி கட்டணங்கள் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை என தனியார் கல்லூரியின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் ஆதித்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்துள்ள இந்த தனியார் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இன்று முதல் இந்த கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முறையாகக் கல்வி கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை என 65-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்லூரி மாணவர்களுடனும், கல்லூரி நிர்வாகத்துடனும் பேச்சு வார்த்தை நடத்தியும், எந்தவித முடிவும் எட்டப்படாததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கல்லூரிக்கு காலதாமதத்தினால் வரும் மாணவர்களுக்கு வருகைப் பதிவு நோட்டில் தாங்கள் வரவில்லை என பதிவு செய்து அபராத கட்டணங்களை வசூல் செய்வதாகவும், கல்லூரியின் முழு கட்டணங்களைச் செலுத்தினால் ஹால் டிக்கெட் தருவதாகக் கூறி முழுமையாக கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் தரவில்லை எனவும், இன்று நடந்த தேர்வு தங்களால் எழுத முடியவில்லை, இதனால் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...