கோவையில் அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்..!

இதில், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயலும் போது காவல்துறையினர் தடுத்ததால் அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இக்கட்சியின் கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் களப்பிரார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



இதனால் ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...