இதில், ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை: அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயலும் போது காவல்துறையினர் தடுத்ததால் அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இக்கட்சியின் கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் களப்பிரார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனால் ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகைப் போராட்டத்திற்கு முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயலும் போது காவல்துறையினர் தடுத்ததால் அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இக்கட்சியின் கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் களப்பிரார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் ரயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.