கோவை ஆனைகட்டி பகுதியில் மான்களை வேட்டையாடி இறைச்சி விற்பனை - 12 பேரை மடக்கி பிடித்த வனத்துறை

இரு வேறு சம்பவங்களில், புள்ளிமானை வெட்டிக் கூறு போட்டு சமைத்த குற்றத்திற்காக 12 பேரிடம் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.2.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கடந்த 18 ஆம் தேதி கோவை வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைகட்டி அடுத்த துவைப்பதி பழங்குடி கிராமத்தில், மான் கறி விற்பனை செய்யப்படுவதாக கோவை வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சமைத்த நிலையில், புள்ளி மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டினுள் சென்று ஆய்வு செய்த போது புள்ளிமான் இறைச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆனைகட்டியை சேர்ந்த முருகன் (49), என்பவரிடம் மான் கறியை வாங்கி துரைசாமி (65) என்பவருக்கு இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.பின்னர், துவைப்பதியை சேர்ந்த முருகன் (55) மற்றும் துரைசாமி இருவரும் இணைந்து ஆனைகட்டி சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன் (39) ஆகிய மூவருக்கும் மான் கறியை விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து, முருகனை வனத்துறையினர் அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த புள்ளிமானின் தலை மற்றும் கொம்பு மற்றும் அதைப்பிடிக்க பயன்படுத்திய சுருக்குவலை, வெட்ட பயன்படுத்திய கொடுவாள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதில் தொடர்புடைய 6 பேரையும் மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் புள்ளி மானை வேட்டையாடிய முருகனுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் மான் இறைச்சியை விலைக்கு வாங்கி சமைத்த 5 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1.25 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று மாலை 7 மணியளவில் ஆனைகட்டி பகுதிக்கு உட்பட்ட மூங்கில் பள்ளம் அருகே மான் கறி மான் இறைச்சி வீட்டில் வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் படி வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூங்கில் பள்ளம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (65) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, கங்கா கால்வாய் அருகே உள்ள காப்பு காட்டிற்கு வெளியே உள்ள ஓடை அருகே தான் வளர்த்த நாயை விட்டு, மானை கடிக்க வைத்து புள்ளிமானை வேட்டையாடிது தெரியவந்தது.



பின்னர், இறந்த மானை வெட்டி தனது வீட்டின் அருகே உள்ள பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), மற்றும் கந்தசாமி என்பவருக்கும் புள்ளி மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மானை வெட்டிய இடத்திற்கு ரங்கசாமியை அழைத்துச் சென்ற வனத்துறையினர், அங்கிருந்து மானின் கொம்பு, தலை மற்றும் தோல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, புள்ளிமானை வெட்டிக் கூறு போட்டு சமைத்த குற்றத்திற்காக 6 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என ரூ.1.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...