பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை: பண நெருக்கடியால், கோவையில் 10 நாட்களில் 50 கோடி ரூபாய் பழைய தங்க நகைகளை விற்ற மக்கள்..!

பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்த தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகை விற்பனை நடைபெற்றுள்ளது.


கோவை: கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளி, கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, கோவையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, தங்க நகை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் கூறியதாவது:



ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அந்த பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், கொரொனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

இதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளை சேர்ப்பதற்காக, பெற்றோர் தாங்கள் சேமித்து வைத்த தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய தங்க நகை விற்பனை நடைபெற்றுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், எதிர்வரும் நாட்களிலும் கூடுதலாக பழைய தங்க நகைகள் விற்பனை செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.

கைகொடுக்கும் தங்க நகை சேமிப்பு..!

கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மந்தமான பொருளாதார சூழல் என பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், பொதுமக்கள் முந்தைய காலங்களில் தங்கள் சேமிப்பு பணத்தை வைத்து தங்க நகைகளை வாங்குவதற்கு முதலீடு செய்த காரணத்தால், இன்று அவர்களுக்கு அந்த தங்க நகைகள் தற்போதுள்ள நெருக்கடியான நிதி நிலையை எதிர்கொள்ள பெரிதும் உதவி வருதிறது

எனவே, தங்கத்தில் முதலீடு செய்தால் எதிர்வரும் காலங்களிலும் பெரிய அளவு நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்கு இன்றைய சூழ்நிலையே சிறந்த சான்றாகும்.

இவ்வாறு தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், முத்து வெங்கட்ராம் தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...