கோவையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தனியார் மில்லில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சூப்பர்வைசரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தனியார் மில்லில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சூப்பர்வைசரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தவர் சாந்து முகமது (28). இவர் பணியாற்றி வந்த மில்லில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது சிறுவன் உணவருந்த மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர்கள் சிறுவனை கண்டிக்கும்படி சாந்து முகமதுவிடம் கூறியதாக தெரிகிறது.
அப்போது சிறுவனை மிரட்டிய சாந்து முகமது அவரது முதுகில் அடித்த போது சிறுவன் கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், சிறுவன் தாக்கப்பட்டு கீழே விழுந்ததால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் உயிரிழப்புக்கு காரணமான சாந்து முகமது மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தவர் சாந்து முகமது (28). இவர் பணியாற்றி வந்த மில்லில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது சிறுவன் உணவருந்த மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர்கள் சிறுவனை கண்டிக்கும்படி சாந்து முகமதுவிடம் கூறியதாக தெரிகிறது.
அப்போது சிறுவனை மிரட்டிய சாந்து முகமது அவரது முதுகில் அடித்த போது சிறுவன் கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், சிறுவன் தாக்கப்பட்டு கீழே விழுந்ததால் உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் உயிரிழப்புக்கு காரணமான சாந்து முகமது மீது 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.