அக்னிபாத் போராட்டம் எதிரொலி: பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வருகை ரத்து.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பங்கேற்கும் மாபெரும் யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



கோவை: ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் என சுமார் 1200 பேர் பங்கேற்கும் மாபெரும் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சூலூர் விமானப்படை யோகா நிகழ்ச்சிக்கு பின், அவினாசி சாலைகொடிசியா வளாகத்தில் நடைபெறும் பாதுகாப்பு துறை சார்ந்த கண்காட்சியை ராஜ்நாத் சிங் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள "அக்னிபாத்" திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டங்களும்,ரயில் மறியலும் நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டத்தின் வீரியம் அதிகரித்து வருவதால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கோவை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொடிசியா வளாகத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகா நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய பாதுகாப்புச் செயலர் அஜய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அக்னிபாத் போராட்டம் காரணமாக அமைச்சரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...