காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ புதுக்கோட்டையில்‌ சமவெளியில்‌ மிளகு சாகுபடி களப்‌ பயிற்சி - 900 விவசாயிகள்‌ பங்கேற்பு!

புதுக்கோட்டையில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் களப் பயிற்சி நடந்ததில் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் களப் பயிற்சி நடந்ததில் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.

காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌' சமவெளியிலும்‌ மிளகு சாகுபடி சாத்தியமே‌ என்ற தலைப்பில்‌ களப்‌ பயிற்சியும்‌, விவசாய கருத்தரங்கும்‌ புதுக்கோட்டையில்‌ இன்று (ஜூன்‌ 19) நடைபெற்றது. இதில்‌ தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ இருந்து சுமார்‌ 900 விவசாயிகள்‌ பங்கேற்றனர்‌.

இது தொடர்பாக, இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ தமிழ்மாறன்‌ கூறுகையில்‌, “பொதுவாக மிளகு சாகுபடி மலை பகுதிகளில்‌ மட்டும்‌ செய்ய முடியும்‌ என விவசாயிகள்‌ எண்ணி கொண்டுள்ளனர்‌. ஆனால்‌, புதுக்கோட்டை பகுதியைச்‌ சேர்ந்த பல விவசாயிகள்‌ பல வருடங்களாக சமவெளியிலேயே மிளகு சாகுபடி செய்து வருகின்றனர்‌. அத்துடன்‌, டிம்பர்‌ மரங்களில்‌ மிளகு கொடியை ஏற்றி கூடுதல்‌ வருவாயும்‌ ஈட்டி வருகின்றனர்‌.



எனவே, இந்த வாய்ப்பை பிற மாவட்ட விவசாயிகளுக்கும்‌ கொண்டு சேர்க்கும்‌ வகையில்‌ நாங்கள்‌ இப்பயிற்சியை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறோம்‌. இதுவரை 5,000 க்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ இப்பயிற்சியால்‌ பயன்பெற்றுள்ளனர்‌. அவ்விவசாயிகள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால்‌ தமிழகம்‌ முழுவதும்‌ மிளகு சாகுபடி நடந்து வருகிறது. விவசாயிகள்‌ தங்களது வழக்கமான பயிர்களுடன்‌ வேலியோரங்களில்‌ உள்ள மரங்களில்‌ மிளகு படர விடலாம்‌. மரப்பயிர்‌ சாகுபடி செய்துள்ள விவசாயிகள்‌ மிளகு சாகுபடி‌ செய்வதன்‌ மூலம்‌ வருடா வருடம்‌ வருமானம்‌ பெற இயலும்‌. மிளகு நட்டு 3 முதல்‌ 4 ஆண்டுகளில்‌ மிளகு காய்க்கத்‌ துவங்கும்‌. 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகு கொடியில்‌ இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும்‌” என்றார்‌.

ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில்‌ உள்ள முன்னோடி விவசாயி பாக்யராஜ்‌ மிளகு தோட்டத்தில்‌ இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில்‌ வெற்றிகரமாக மிளகு சாகுபடி‌ செய்து லாபம்‌ ஈட்டி வரும்‌ முன்னோடி விவசாயிகளான, பாலுசாமி, ராஜாகண்ணு, பாக்யராஜ்‌, செந்தமிழ்‌ செல்வன்‌, திருமலை மிளகு சாகுபடியின்‌ நுணுக்கங்களையும்‌ தங்கள்‌ அனுபவங்களையும்‌ பகிர்ந்து கொண்டனர்‌.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர்‌ ராம. சிவக்குமார்‌, கூடுதல்‌ இயக்குனர்‌ செந்தில்‌ குமார்‌, காவேரி கூக்குரல்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ ஸ்வாமி ஸ்ரீமுகா ஆகியோரும்‌ விவசாயிகளுக்கு ஆலோசனைகள்‌ வழங்கினர்‌.



இந்திய விவசாய சங்கத்‌ தலைவர்‌ தனபதி, காவல்துறை துணை கண்காணிப்பாளர்‌ ஸ்ரீபரத்‌ சீனிவாசன்‌, விவசாயி மரம்‌ கண்ணன்‌ ஆகியோர்‌ குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்‌.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...