புதுக்கோட்டையில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் களப் பயிற்சி நடந்ததில் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் களப் பயிற்சி நடந்ததில் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்' சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் களப் பயிற்சியும், விவசாய கருத்தரங்கும் புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக, இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், “பொதுவாக மிளகு சாகுபடி மலை பகுதிகளில் மட்டும் செய்ய முடியும் என விவசாயிகள் எண்ணி கொண்டுள்ளனர். ஆனால், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் பல வருடங்களாக சமவெளியிலேயே மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன், டிம்பர் மரங்களில் மிளகு கொடியை ஏற்றி கூடுதல் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.

எனவே, இந்த வாய்ப்பை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நாங்கள் இப்பயிற்சியை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியால் பயன்பெற்றுள்ளனர். அவ்விவசாயிகள் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடி நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் வருடா வருடம் வருமானம் பெற இயலும். மிளகு நட்டு 3 முதல் 4 ஆண்டுகளில் மிளகு காய்க்கத் துவங்கும். 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகு கொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும்” என்றார்.
ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி பாக்யராஜ் மிளகு தோட்டத்தில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில் வெற்றிகரமாக மிளகு சாகுபடி செய்து லாபம் ஈட்டி வரும் முன்னோடி விவசாயிகளான, பாலுசாமி, ராஜாகண்ணு, பாக்யராஜ், செந்தமிழ் செல்வன், திருமலை மிளகு சாகுபடியின் நுணுக்கங்களையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராம. சிவக்குமார், கூடுதல் இயக்குனர் செந்தில் குமார், காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா ஆகியோரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

இந்திய விவசாய சங்கத் தலைவர் தனபதி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீபரத் சீனிவாசன், விவசாயி மரம் கண்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்' சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியமே என்ற தலைப்பில் களப் பயிற்சியும், விவசாய கருத்தரங்கும் புதுக்கோட்டையில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 900 விவசாயிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக, இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், “பொதுவாக மிளகு சாகுபடி மலை பகுதிகளில் மட்டும் செய்ய முடியும் என விவசாயிகள் எண்ணி கொண்டுள்ளனர். ஆனால், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள் பல வருடங்களாக சமவெளியிலேயே மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். அத்துடன், டிம்பர் மரங்களில் மிளகு கொடியை ஏற்றி கூடுதல் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
எனவே, இந்த வாய்ப்பை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நாங்கள் இப்பயிற்சியை கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறோம். இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பயிற்சியால் பயன்பெற்றுள்ளனர். அவ்விவசாயிகள் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடியை தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் மிளகு சாகுபடி நடந்து வருகிறது. விவசாயிகள் தங்களது வழக்கமான பயிர்களுடன் வேலியோரங்களில் உள்ள மரங்களில் மிளகு படர விடலாம். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் வருடா வருடம் வருமானம் பெற இயலும். மிளகு நட்டு 3 முதல் 4 ஆண்டுகளில் மிளகு காய்க்கத் துவங்கும். 10 ஆண்டு வளர்ந்த ஒரு மிளகு கொடியில் இருந்து 10 கிலோ வரை மிளகு அறுவடை செய்ய முடியும்” என்றார்.
ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி பாக்யராஜ் மிளகு தோட்டத்தில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதில் வெற்றிகரமாக மிளகு சாகுபடி செய்து லாபம் ஈட்டி வரும் முன்னோடி விவசாயிகளான, பாலுசாமி, ராஜாகண்ணு, பாக்யராஜ், செந்தமிழ் செல்வன், திருமலை மிளகு சாகுபடியின் நுணுக்கங்களையும் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை துறை இயக்குனர் ராம. சிவக்குமார், கூடுதல் இயக்குனர் செந்தில் குமார், காவேரி கூக்குரல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி ஸ்ரீமுகா ஆகியோரும் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
இந்திய விவசாய சங்கத் தலைவர் தனபதி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீபரத் சீனிவாசன், விவசாயி மரம் கண்ணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.