நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் 6 பேர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் 6 பேர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அணிஷ் என்கின்ற சேட்டன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்,அதேபோல் ஆனைமலை காவல் நிலைய எல்லையில், கேரளா மாநிலம் செமணாம்பதியைசேர்ந்த அலி (54), பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை எல்லைக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் ராம்குமார் (19), மேலும் காங்கேயம்பாளையம் சோதனைச் சாவடி பகுதியில் ரவீந்திரதாஸ் (46) என்பவரை சூலூர் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், ஈச்சனாரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அமர்நாத் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர்.மேலும், கோவை மாநகர்செட்டிபாளையம் - ஈச்சனாரி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிள்ளையார்புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (39) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்து விற்பனைக்கு எடுத்து வந்த பிக்கப் வேன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பிடிக்கப்பட்ட 6 பேரும் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.