ஆபரேஷன் 2.O: கோவையில் ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது - 3.35 கிலோ கஞ்சா பறிமுதல்…!

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் 6 பேர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.








கோவை: ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் கோவை மாவட்டம் முழுவதும் 6 பேர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார் 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அணிஷ் என்கின்ற சேட்டன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்,அதேபோல் ஆனைமலை காவல் நிலைய எல்லையில், கேரளா மாநிலம் செமணாம்பதியைசேர்ந்த அலி (54), பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை எல்லைக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் ராம்குமார் (19), மேலும் காங்கேயம்பாளையம் சோதனைச் சாவடி பகுதியில் ரவீந்திரதாஸ் (46) என்பவரை சூலூர் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், ஈச்சனாரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அமர்நாத் என்பவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர்.மேலும், கோவை மாநகர்செட்டிபாளையம் - ஈச்சனாரி சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிள்ளையார்புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (39) என்பவரை போத்தனூர் போலீசார் கைது செய்து விற்பனைக்கு எடுத்து வந்த பிக்கப் வேன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பிடிக்கப்பட்ட 6 பேரும் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து 3.35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...