கோவை பொள்ளாச்சி அருகே இருவேறு இடங்களில் கஞ்சா விற்ற 2-பேர் கைது: 200-கிராம் கஞ்சா பறிமுதல்..!

பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டு 200-கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், வெள்ளாளபாளையத்தை செல்வராஜ் (38) என்பதும், மேலும், அவர் கஞ்சாவிற்பனை செய்வதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 100-கிராம் கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் பகுதியில் உள்ள மதுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த அனீஷ் (40) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...