பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டு 200-கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவை பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், வெள்ளாளபாளையத்தை செல்வராஜ் (38) என்பதும், மேலும், அவர் கஞ்சாவிற்பனை செய்வதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 100-கிராம் கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் பகுதியில் உள்ள மதுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த அனீஷ் (40) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், வெள்ளாளபாளையத்தை செல்வராஜ் (38) என்பதும், மேலும், அவர் கஞ்சாவிற்பனை செய்வதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 100-கிராம் கஞ்சா, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் பகுதியில் உள்ள மதுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த அனீஷ் (40) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சாவை வைத்து இருந்ததும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.