கல்விக் கடன் பெறுவதில் சிரமமா? உடனடியாக மாவட்ட ஆட்சியரை அணுகலாம்- கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!

மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால், கல்வி நிறுவனங்கள் மூலம் அணுகலாம் இல்லை மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்வி கடன் பெறலாம் என தெரிவித்தார்.



கோவை: கோவை கொடிசியா தொழிற் கூட வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் மாணவ மாணவியருக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 293 மாணவ மாணவியருக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்கள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பயனாளிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல்வர் கோவை மாவட்டத்தில் கல்வி கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் என்றும்இன்று293 மாணவ மாணவிக்கு 44 கோடி ரூபாய் கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக் கடன் வழங்க ஏற்பாடு இலக்கு செய்துள்ளது. வரும் 30 நாட்களில் 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்க உள்ளது எனவும், எனவே கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும், வங்கி மேலாளர்கள் சிபில் ஸ்கோர் பிரச்சனையால் கல்விக் கடன்களை வழங்காமல் இருக்க கூடாது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னோடி வங்கிகள் விண்ணப்பிக்க கூடிய மாணவ -மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக் கடன் அக்கறைகொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை துறை சார்ந்தவர்கள் ஏதேனும் கல்விக்கடன் கிடைக்கப் பெறாமல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கவனத்திற்கு கொண்டு வரலாம், மாணவச் செல்வங்களுக்கு கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால் கல்வி நிறுவனங்கள் மூலமாக நீங்கள் அணுகலாம் இல்லை

மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்வி கடன் பெறலாம் என தெரிவித்தார்.

கடந்த ஓராண்டாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவில்லை என வானதி சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ள நிலையில், இது குறித்து பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜிகடந்த ஆட்சியில் நடந்த குளறுபடிகள் காரணமாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் 2021 பதவியேற்ற பின்பு கோவை மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் எடுத்து வருகிறார். தமிழகத்தில் ஒரு அரங்கத்தில் இருபத்தைந்தாயிரம் பயனாளிகளுக்கு வ உ சி மைதானத்தில் அரசு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அமைச்சர் அவர்கள் கோவைக்கு வருகை தந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவாக அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என ஆலோசனை உத்தரவுகளை வழங்கியிருக்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் விரைவாக முடிக்க உத்தரவை வழங்கியுள்ளனர். சட்டமன்ற தொகுதிக்கு ஏற்பட்ட குறைகள் இருந்தால் மாவட்டநிர்வாகத்திற்கு சொன்னால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதும், குளங்களை பொறுத்தவரை பணிகள் செய்கின்ற போது சமூக ஆர்வலர்கள் குளத்தின் அளவை குறைத்து உள்ளார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இதையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...