திருப்பூரில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் புகைப்படங்களை திருப்பூர் குமரனின் நினைவகத்தில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூரில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் புகைப்படங்களை திருப்பூர் குமரனின் நினைவகத்தில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
திருப்பூர் குமரன் நினைவகத்தில் திருப்பூரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி திருப்பூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து புத்தகத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.

பின்பு தியாகிகளின் குடும்பங்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினித், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் குமரன் நினைவகத்தில் திருப்பூரைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தமிழறிஞர்களின் புகைப்பட கண்காட்சி திருப்பூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து புத்தகத்தையும் அமைச்சர் வெளியிட்டார்.
பின்பு தியாகிகளின் குடும்பங்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினித், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.