நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உ.பி, ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உ.பி, ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நிபுல் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரியும், உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளை இடித்து தள்ளிய உத்தரப்பிரதேச மாநில முதல்வரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து, ஒன்றிய அரசு பதவி விலகக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.