கோவையில் நகர்புற நலவாழ்வு மையம், மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

மத்திய மண்டல பகுதியில்‌ ரூ.10.22-கோடி மதிப்பீட்டில்‌ 2-இடங்களில்‌ தலா ரூ.25-இலட்சம்‌ வீதம்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ 3-இடங்களில்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்‌.


கோவை: கோவையில் நகர்புற நலவாழ்வு மையம், மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல பகுதியில்‌ ரூ.10.22 கோடி மதிப்பீட்டில்‌ 2 இடங்களில்‌ தலா ரூ.25 இலட்சம்‌ வீதம்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ 3 இடங்களில்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பணியினை தொடங்கி வைத்தார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டல பகுதியில்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணிகள்‌ மற்றும்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி இன்று (17.06.2022) பணியினை தொடங்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.68க்குட்பட்ட காந்தி நகர்‌, வார்டு எண்‌.62க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம்‌ பகுதியில்‌ தலா ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணியினையும்‌,



வார்டு எண்‌.47க்குட்பட்ட நேரு வீதியில்‌ ரூ.3.08 கோடி மதிப்பீட்டில்‌, 28 இலட்சம்‌ லிட்டா்‌ கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌,



வார்டு எண்‌.67 க்குட்பட்ட வ.உ.சி பூங்கா அருகில்‌ ரூ.4.64 கோடி மதிப்பீட்டில்‌, 42.200 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌,



வார்டு எணி்.82க்குட்பட்ட டவுன்ஹால்‌ பகுதியில்‌ ரூ.2 கோடி மதிப்பீட்டில்‌, 19.70 இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட (மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌, ஆகமொத்தம்‌ ரூ.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்புற நலவாழ்வு மையம்‌ கட்டும்‌ பணியினையும்‌, ரூ.9.72 கோடி மதிப்பீட்டில்‌ மேல்நிலை நீர்த்தேக்கத்‌ தொட்டி கட்டுமான பணியினையும்‌ மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷா்மிளா, மாநகரப்‌ பொறியாளர்‌ (பொ) எஸ்‌.அரசு, மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, மேற்கு மண்டலத்‌ தலைவர்‌ ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர்‌ சங்கர்‌, முன்னாள்‌ பேரூராட்சித்தலைவர்‌ பையா கிருஷ்ணன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினா்‌ நா.கார்த்திக்‌, நிலைக்குழுத்‌ தலைவர்கள்‌ சாந்தி முருகன்‌ (பணிகள்‌), வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (௭) சந்தோஷ்‌ (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன்‌ (பொது சுகாதாரம்‌), மாமன்ற உறுப்பினர்கள்‌ கமலாவதிபோஸ்‌, பேபிசுதா ரவி, ஆர்‌.வித்யா, ரேவதி முரளி, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலா்‌ இராமச்சந்திரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...