பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'படித்த முட்டாள், மட்டரகமான அரசியல்வாதி' - அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!

விளம்பரத்திற்கும் வேலைக்கும் வித்தியாசம் உண்டு, நாங்கள் மக்களுக்காக வேலை செய்கிறோம், மட்டரகமான அரசியல்வாதிக்கும், தரம் தாழ்ந்து பேசக்கூடிய அரசியல்வாதிக்கும், பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம், அண்ணாமலை படித்த முட்டாள் என தெரிவித்துள்ளார்.



கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படித்த முட்டாள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பின்புறம் 19.70-லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஓராண்டில் மட்டும் 198-கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மாநகராட்சி கோவிலில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் 113-கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், இன்று 38-கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மாநகராட்சி விடுபட்ட சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கருத்துரு அனுப்பப்பட்டு, கூடுதல் நிதி களைப் பெற்று கோவை மாநகராட்சி பொறுத்தவரை அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்ட சீரமைக்கப்பட்ட சாலைகள் முதல்வரின் ஆட்சியில் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைது செந்தில் பாலாஜி என அண்ணாமலை கூறியதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சில பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் எனவும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது எனவும், வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலையின் கனவு ஒருநாளும் பலிக்காது, இவ்வளவு பேசுபவர்கள் ஏன் அரவகுறிச்சியில் மண்ணை கவ்வினார்? ஏன் மக்கள் விரட்டியடித்தார்கள்? என கேள்வி எழுப்பினார். நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் இப்போது கூட எடுக்கலாமே? நாங்கள் வேண்டாம் என்று கூறுகிறோம் எனக்கேட்டார்.

மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தாறே எங்கிருந்து வந்தது? காவல் துறையில் சம்பளம் வாங்கி சம்பளத்தை சேர்த்து வைத்து, அல்லது ஆடு மாடு மேய்த்து சேர்த்து வைத்தா வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார் என கேள்வி எழுப்பியதோடு எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது, நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் எனவும் நேர்மையான நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகம் எனத் தெரிவித்தார்.

மேலும், 143-கோடி டாலருக்கு நிலக்கிரி குறைவான விலையில் நாங்கள் வாங்கியிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பிய அமைச்சர் நிலக்கரி குறைவான அளவு இறக்குமதி செய்யும் போது கூட தமிழகத்தில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குஜராத்தில் ஏன் தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு அறிவித்துள்ளார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் அறிவிக்கும் 39-வேட்பாளர்களும் மகத்தான் வெற்றியை பெறுவார்கள் எனவும், பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக முதல்வர் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை நீதிமன்றத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்ட தீ-விபத்தில் பெண், அணிலால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற வன உயிரினங்களால் மின்வெட்டு ஏற்படுமா ஏற்படாதா என அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பினார்.

விளம்பரத்திற்கும் வேலைக்கும் வித்தியாசம் உள்ளது எனவும், நாங்கள் மக்களுக்கு வேலை செய்கிறோம் எனவும், அண்ணாமலை வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார் எனவும், மட்டரகமான அரசியல்வாதிக்கு, தரம் தாழ்ந்து பேசக்கூடிய அரசியல்வாதிக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், ஒன்னாம் நம்பர் படிச்ச முட்டாள் எனவும் கூறினார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...