அதிமுக தலைமை OPS ஆ..? EPS ஆ..? தொடரும் போஸ்டர் யுத்தம்.. திருப்பூரில் OPS-ஆதரவாளர்களின் போஸ்டரில் EPS-படம்..!

பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி வரும் வேளையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டரில் இபிஎஸ் படம் இடம் பெற்றிருந்தது.


திருப்பூர்: அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தொடர்ந்து போஸ்டர் யுத்தம் நடத்தி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், கட்சிக்கு ஒற்றை தலைமையே வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் ஒரே தலைமை என்ற கோரிக்கை வலுவாக இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

திருப்பூரில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பழைய பேருந்து நிலையம், சிடிசி கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்களில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவரே, ஒற்றை தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வாருங்கள்" என்றும், "தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தலைமையே" என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், வெகுநாட்களாகவே ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவி வந்தது. ஆனால், அப்போதெல்லாம் அதுபோன்ற சூழல் இல்லை என்று அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒற்றைத் தலைமை கோரிக்கை அக்கட்சியில் தலைதூக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் மூடிமறைக்கப்பட்ட கோஷ்டிப் பூசல் இந்த போஸ்டர் யுத்தம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் ஒட்டி வரும் வேளையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒட்டப்பட்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களின் போஸ்டரில் இபிஎஸ் படம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...