கோவை சூலூரில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் உட்பட 3-பேர் கைது: 2-கிலோ கஞ்சா பறிமுதல்..!

2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சூலூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் உட்பட 3-பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலூர் குமரன் கோட்டம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் போலீசாரை கண்டதும் தங்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.



முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் சூலூரை சேர்ந்த கார்த்திக் (24) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராஜ் (32), மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபி கான் (33) என்பதும், மூவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், மொத்தமாக கஞ்சாவை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த 2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...