2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை சூலூரில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் உட்பட 3-பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலூர் குமரன் கோட்டம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் போலீசாரை கண்டதும் தங்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் சூலூரை சேர்ந்த கார்த்திக் (24) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராஜ் (32), மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபி கான் (33) என்பதும், மூவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், மொத்தமாக கஞ்சாவை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த 2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை சூலூர் குமரன் கோட்டம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் போலீசாரை கண்டதும் தங்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் சூலூரை சேர்ந்த கார்த்திக் (24) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராஜ் (32), மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாபி கான் (33) என்பதும், மூவரும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், மொத்தமாக கஞ்சாவை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்த 2-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.