நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்கள் கைது: கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

கோவையில் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்களை தடாகம் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்களை தடாகம் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து சீல் வைத்துள்ளது.



இந்நிலையில் இன்று மாலை வீரபாண்டி அருகே உள்ள உமா என்ற தனியார் செங்கல் சூளையில் திருட்டுத்தனமாக லாரியில் (TN 20 AA 9599) செங்கல்களை ஏற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் தலைமையிலான காவல்துறையினர் செங்கல் திருட்டில் ஈடுபட்டு வந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமி (40) மற்றும் கருப்பசாமி(20) ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு கனிமவள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.



மேலும் லாரியின் உரிமையாளர் பரசுராமன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் கார்த்திக் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பரசுராமன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...