கோவையில் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்களை தடாகம் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளையில் செங்கல் திருடியவர்களை தடாகம் காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கனிமவள சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து சீல் வைத்துள்ளது.

இந்நிலையில் இன்று மாலை வீரபாண்டி அருகே உள்ள உமா என்ற தனியார் செங்கல் சூளையில் திருட்டுத்தனமாக லாரியில் (TN 20 AA 9599) செங்கல்களை ஏற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் தலைமையிலான காவல்துறையினர் செங்கல் திருட்டில் ஈடுபட்டு வந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமி (40) மற்றும் கருப்பசாமி(20) ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு கனிமவள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் லாரியின் உரிமையாளர் பரசுராமன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் கார்த்திக் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பரசுராமன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து சீல் வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை வீரபாண்டி அருகே உள்ள உமா என்ற தனியார் செங்கல் சூளையில் திருட்டுத்தனமாக லாரியில் (TN 20 AA 9599) செங்கல்களை ஏற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் தலைமையிலான காவல்துறையினர் செங்கல் திருட்டில் ஈடுபட்டு வந்த லாரி ஓட்டுநர் கருப்பசாமி (40) மற்றும் கருப்பசாமி(20) ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு கனிமவள சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் லாரியின் உரிமையாளர் பரசுராமன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர் கார்த்திக் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பரசுராமன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.