ஆட்சி மாறும் போது முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான் - கோவையில் பாஜக அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால், இரவு 2 மணிக்கு கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. தமிழக அரசு, காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை: கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் நல திட்டங்கள் பெற்ற பயனாளிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராகுல் காந்தியை, அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முதல்வரை எதிர்த்து பதிவு ஏதேனும் செய்தால் இரவு 2 மணிக்கு கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. தமிழக அரசு, காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளது.

அடுத்த ஒன்றரை வருடங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிப்பதற்கு காவேரி நீர் மேலாண்மைக்கு அங்கீகாரம் கிடையாது.

2021 முதல்வர் கூட்டத்தில் TANGEDCO பி.ஜி.ஆர் க்கு தான் கொடுக்க வேண்டும் என முதல்வர் கூறினாரா, இல்லையா?. இப்போது இருந்து, மூன்று ஆண்டுகள் வேண்டுமானால் திமுக தப்பிக்கலாமே தவிர, ஆட்சி மாறும் போது முதல் கைது மின்சாரத்துறை அமைச்சர் தான். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவது ஒரு ஸ்டேஜ் ஆக்டிங் போல் உள்ளது.

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வருக்கு சம்பந்தம் உள்ளது என முக்கிய குற்றவாளி தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசவில்லை. கேரள முதலமைச்சருக்கு தங்க கடத்தல்காரர் என அவர்களது மக்கள் பெயர் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பேசுவதற்கு முகாந்திரம் இல்லை.

சீரடிக்கு கோவையிலிருந்து தனியார் ரயில் சேவை தொடங்கியதற்கு கருத்து தெரிவித்துள்ள டி.ஆர் பாலுவிற்கு பதில் கருத்து தெரிவித்த அண்ணாமலை, அரசு ரயில்களும் சீரடிக்கு இயக்கப்படுவதாகவும், இந்த ரயிலில் செல்வது மக்களின் விருப்பம்.

இதில் தவறு என சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை என தெரிவித்தார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக என்றும் தலையிடாது, எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...