கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அணைப்பாலம், ஸ்ரீ சக்தி தியேட்டர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழ்நிலையில் திடீரென மாலை நேரத்தில் திருப்பூர் மாநகர பகுதிகளான அவினாசி சாலை, பல்லடம் சாலை, செவந்தாம்பாளையம் ராக்கியாபாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு, ஆண்டிபாளையம், கருவம்பாளையம், ராயபுரம், ஷெரிப் காலனி, மண்ணறை, காமராஜர் சாலை, கல்லூரி சாலை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கன மழையின் காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அணைப்பாலம், ஸ்ரீ சக்தி தியேட்டர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.