கோவை வால்பாறை அருகே அழுகிய நிலையில் சிறுத்தை குட்டியின் உடல் கண்டெடுப்பு..!

சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.


கோவை: வால்பாறை அருகே அழுகிய நிலையில் சிறுத்தை குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1-வது தேயிலைத் தோட்ட பிரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்பகுதியில், துர்நாற்றம் வீசியதால் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் அவர்களுக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு தேயிலை செடிக்கு அருகில் இறந்து பல நாட்கள் அழுகிய நிலையில் சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. அதை அடுத்து சிறுத்தை குட்டியை எடுத்து மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் ஆய்வு செய்தனர்.



ஆனைமலை புலிகள் காப்பக கள இணை இயக்குநர் அறிவுறுத்தலின் படி ACF-செல்வம் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் NCF கணேஷ் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர். சிறுத்தை குட்டி ஆண் குட்டி என்பதும் 6 மாதங்கள் ஆகிய நிலையில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.



மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளது. காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...