சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதால் காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர். இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.
கோவை: வால்பாறை அருகே அழுகிய நிலையில் சிறுத்தை குட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1-வது தேயிலைத் தோட்ட பிரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியில், துர்நாற்றம் வீசியதால் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் அவர்களுக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு தேயிலை செடிக்கு அருகில் இறந்து பல நாட்கள் அழுகிய நிலையில் சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. அதை அடுத்து சிறுத்தை குட்டியை எடுத்து மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் ஆய்வு செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பக கள இணை இயக்குநர் அறிவுறுத்தலின் படி ACF-செல்வம் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் NCF கணேஷ் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர். சிறுத்தை குட்டி ஆண் குட்டி என்பதும் 6 மாதங்கள் ஆகிய நிலையில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளது. காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1-வது தேயிலைத் தோட்ட பிரிவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியில், துர்நாற்றம் வீசியதால் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் அவர்களுக்குத் தகவல் கொடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு தேயிலை செடிக்கு அருகில் இறந்து பல நாட்கள் அழுகிய நிலையில் சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. அதை அடுத்து சிறுத்தை குட்டியை எடுத்து மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் ஆய்வு செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக கள இணை இயக்குநர் அறிவுறுத்தலின் படி ACF-செல்வம் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் NCF கணேஷ் ஆகியோர்கள் ஆய்வு செய்தனர். சிறுத்தை குட்டி ஆண் குட்டி என்பதும் 6 மாதங்கள் ஆகிய நிலையில் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளது. காட்டுப்பன்றிகள் கடித்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர் இறந்த சிறுத்தை குட்டியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து தீ வைத்து எரித்தனர்.