தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவினர் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவினர் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணியை ஆய்வு மேற்கொண்டனர்.

அரவிந்த் மருத்துவமனை அருகே மேம்பால பணிகள் எந்த அளவிற்கு முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்த விளக்க புகைப்படங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவர், கோவி செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், உறுப்பினர்கள் கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில்குமார், பிரபாகர ராஜா, மாங்குடி உள்ளிட்டோரும், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து, டைட்டில் பார்க் அருகில் BT சாலை அமைக்கும் பணி, வெள்ளலூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி சிங்காநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள், 63-வது வார்டு ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளை பார்வையிட உள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவினர் கோவையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மேம்பாலம், கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக அவினாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் கோல்ட்வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணியை ஆய்வு மேற்கொண்டனர்.
அரவிந்த் மருத்துவமனை அருகே மேம்பால பணிகள் எந்த அளவிற்கு முடிக்கப்பட்டுள்ளது. பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்த விளக்க புகைப்படங்களைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு தலைவர், கோவி செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், உறுப்பினர்கள் கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில்குமார், பிரபாகர ராஜா, மாங்குடி உள்ளிட்டோரும், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து, டைட்டில் பார்க் அருகில் BT சாலை அமைக்கும் பணி, வெள்ளலூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி சிங்காநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள், 63-வது வார்டு ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனரமைப்பு பணிகளை பார்வையிட உள்ளனர்.