கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைப்பு: தொழிலாளி கைது…!

பொள்ளாச்சி – கோட்டூர் இடையே மது போதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைப்பு தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை பொள்ளாச்சி – கோட்டூர் இடையே இயக்கப்பட்டு வரும் (எண் -17) அரசு பேருந்து நேற்று வழக்கம் போல கோட்டூர் சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி கிளம்பியது. அப்போது பேருந்து கோட்டூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவாறு நின்று கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.

அப்போது அரசு பேருந்து ஓட்டி வந்த அங்காலங்குறிச்சியை சேர்ந்த ஜெகநாதன் (52), சாலையின் ஓரமாக நிற்குமாறு மது போதையில் இருந்த நபரை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர் விலகிச் செல்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து ஓட்டுநர் ஜெகநாதன் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் (39) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...