பொள்ளாச்சி – கோட்டூர் இடையே மது போதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் மது போதையில் அரசு பேருந்து ஜன்னல் கண்ணாடி உடைப்பு தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை பொள்ளாச்சி – கோட்டூர் இடையே இயக்கப்பட்டு வரும் (எண் -17) அரசு பேருந்து நேற்று வழக்கம் போல கோட்டூர் சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி கிளம்பியது. அப்போது பேருந்து கோட்டூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவாறு நின்று கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
அப்போது அரசு பேருந்து ஓட்டி வந்த அங்காலங்குறிச்சியை சேர்ந்த ஜெகநாதன் (52), சாலையின் ஓரமாக நிற்குமாறு மது போதையில் இருந்த நபரை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர் விலகிச் செல்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஓட்டுநர் ஜெகநாதன் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் (39) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை பொள்ளாச்சி – கோட்டூர் இடையே இயக்கப்பட்டு வரும் (எண் -17) அரசு பேருந்து நேற்று வழக்கம் போல கோட்டூர் சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி கிளம்பியது. அப்போது பேருந்து கோட்டூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மாகாளியம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவாறு நின்று கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
அப்போது அரசு பேருந்து ஓட்டி வந்த அங்காலங்குறிச்சியை சேர்ந்த ஜெகநாதன் (52), சாலையின் ஓரமாக நிற்குமாறு மது போதையில் இருந்த நபரை அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர் விலகிச் செல்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு, சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஓட்டுநர் ஜெகநாதன் கோட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைத்த அதே பகுதியை சேர்ந்த பஞ்சலிங்கம் (39) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.