கோவையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

தொழிலாளர்கள் அனைவரும் கடந்த கால அதிமுக ஆட்சியையும் தற்போது உள்ள திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் உரையாற்றினார்.



கோவை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பதிவு பெற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.



இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். இதில் 13 கோடியே 82-லட்சத்து 49-ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மேயர் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கோவையில் 3000 பதிவு பெற்ற பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு சாதனம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.



2011-ல் நான் வாரிய தலைவராக இருந்த போது இந்த வாரியத்தில் 32 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததாகவும், அதன்பின் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு பிறகு தற்போது நான் பொறுப்பேற்ற பின் பார்த்தால் 13 லட்சம் பேராக குறைந்துள்ளதாக தெரிவித்தார். அதன்பின் இந்த ஓராண்டு காலத்தில் ஏறத்தாழ 6 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு காரணம் முதல்வரின் முயற்சியும் ஆக்கமும் ஊக்கமும் என கூறினார். கடந்த 10 ஆண்டு காலத்தில் எந்த ஒரு நலதிட்டமும் உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது திமுக ஆட்சியில் சாலை விபத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பேறுகால உதவித்தொகை 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே உதவிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை தாண்டி வீடு கட்டும் தொழிலாளி வீதியிலே உறங்குகிறார் என பேரறிஞர் அண்ணா சொன்னதற்கு அவருடைய தம்பி கலைஞர், அவருடைய மகனான முக ஸ்டாலின் தற்போது பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட 4 லட்சம் ரூபாய் இலவசமாக அளிக்க உத்தரவிடுள்ளதை சுட்டி காட்டினார்.



எனவே மக்கள் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியையும் இந்த ஓராண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு யார் இந்த நாட்டிற்கு சிறந்த நிர்வாகத்தை அளிக்கிறார்கள், யார் வந்தால் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், யாருடைய தலைமையில் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...