கோவை பொள்ளாச்சி அருகே பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்த மலை கிராமத்திற்கு பேட்டரி வாகனம் வனத்துறை மூலம் வழங்கல்..!

தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகிய வனத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் 14-பேர் செல்லும் அளவிற்கு 2.80-லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி வாகனத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று வழங்கினர்.


கோவை: பொள்ளாச்சி அருகே பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாமல் தவித்த மலை கிராமத்திற்கு பேட்டரி வாகனம் வனத்துறை மூலம் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ளது. பழைய சர்கார்பதி மலை கிராமம். தொடக்கப்பள்ளி மட்டுமே இங்கு உள்ள நிலையில் உயர்கல்வி பயில மாணவர்கள் 6 கிலோ மீட்டர்கள் நடந்து பயணிக்கும் நிலை இருந்தது.

இதனால், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்ட நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அணுகிய வனத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் 14-பேர் செல்லும் அளவிற்கு 2.80-லட்சம் மதிப்பிலான ஒரு பேட்டரி வாகனத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இன்று வழங்கினர்.



இதையடுத்து, மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி வாகனத்தில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக பழைய சர்கார்பதி மலைக்கிராமத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளதாகவும்.

மேலும், பல தன்னார்வ அமைப்புகளை அணுகி அடுத்த கட்டமாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கூமாட்டி, சின்னார்பதி, கோழிகமுத்தி, எருமை பாறை, ஆகிய மலைகிராம மாணவர்கள் பள்ளி செல்ல இது போன்ற பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்து தர உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...