கடந்த 10-ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 75-ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்தது - அமைச்சர் சிவி கணேசன்..!

தமிழக முதல்வர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தனக்கு ஏற்பட்ட இன்னலாக கருதி, தொழிலாளர்கள் சாலையில் கொடி பிடித்து கொண்டு போராடாத நிலையை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அரசு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன், தமிழக முதல்வர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தனக்கு ஏற்பட்ட இன்னலாக கருதி, தொழிலாளர்கள் சாலையில் கொடி பிடித்து கொண்டு போராடாத நிலையை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று குறளுக்கேற்ப அமைச்சர் கே என் நேரு வை நகராட்சி நிர்வாக துறைக்கு முதல்வர் அமைச்சராக்கி உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆட்சி வந்து ஒரு ஆண்டு காலம் ஆகிறது தொழிலாளர்களை இது வரை யாரும் சந்தித்தது இல்லை யாரும் கோரிக்கைகள் வைத்தது இல்லை. எனினும் அனைவருக்கும் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படுகிறது என கூறினார்.

நானும் ஒரு தொழிலாளியின் மகன் எனவும் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் 75,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்ததாகக் கூறிய அவர், முதல்வர் பொறுப்பேற்றவுடன் 25 நாட்களில் 50,000 பேருக்கு உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிவித்தார்.

தொழிலாளர் நலத்துறையில் 10 ஆண்டு காலத்தில் முடியாததை 25 நாட்களில் செய்து முடித்தோம் என தெரிவித்தார். கட்டுமான தொழிலாளராக இருந்தாலும், அமைப்புசாரா தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கான நலத்திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் எனது கவனத்திற்கோ அல்லது பொன்குமார் கவனத்திற்கோ கொண்டு வந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

முதலில் எல்லாம் யாரேனும் உயிரிழந்தால் 5 ஆண்டுகளுக்கு பணம் போய் சேராமல் இருந்தது என கூறிய அவர் தற்போது எல்லாம் அலுவலர்கள் உடனுக்குடன் பணத்தை தர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் வீட்டிற்கே அலுவலர்கள் சென்று உதவிகளை வழங்க கூடிய அரசாங்கம் முதல்வரின் அரசாங்கம் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...