தேயிலை தோட்ட கிளப்பில் சமையல் வேலை செய்யும் ஒருவரை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று இரவு வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆனைமலை கிளப் உள்ளது. இங்கு சேவியர் வயது 64 என்பவர் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 12-மணி அளவில் சமையல் வேலையை முடித்து விட்டு பின் பகுதியில் உள்ள கேட்டை மூடுவதற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த கரடி ஒன்று வேகமாக வந்து அவரை தாக்கியது.

இதில், வலது கையில் கடித்ததால் பலத்த காயம் அடைந்தார். அங்கு வேலை செய்தவர்கள் கரடியை விரட்டி அவரை காப்பாற்றி வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் 5-ஆயிரம் ரூபாய் வழங்கி பின்பு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று இரவு வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆனைமலை கிளப் உள்ளது. இங்கு சேவியர் வயது 64 என்பவர் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 12-மணி அளவில் சமையல் வேலையை முடித்து விட்டு பின் பகுதியில் உள்ள கேட்டை மூடுவதற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த கரடி ஒன்று வேகமாக வந்து அவரை தாக்கியது.
இதில், வலது கையில் கடித்ததால் பலத்த காயம் அடைந்தார். அங்கு வேலை செய்தவர்கள் கரடியை விரட்டி அவரை காப்பாற்றி வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் 5-ஆயிரம் ரூபாய் வழங்கி பின்பு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.