கோவை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கரடி நடமாட்டம்..!

தேயிலை தோட்ட கிளப்பில் சமையல் வேலை செய்யும் ஒருவரை கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகக் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நேற்று இரவு வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆனைமலை கிளப் உள்ளது. இங்கு சேவியர் வயது 64 என்பவர் சமையல்காரராக வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு சுமார் 12-மணி அளவில் சமையல் வேலையை முடித்து விட்டு பின் பகுதியில் உள்ள கேட்டை மூடுவதற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த கரடி ஒன்று வேகமாக வந்து அவரை தாக்கியது.



இதில், வலது கையில் கடித்ததால் பலத்த காயம் அடைந்தார். அங்கு வேலை செய்தவர்கள் கரடியை விரட்டி அவரை காப்பாற்றி வால்பாறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வால்பாறை வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷ் 5-ஆயிரம் ரூபாய் வழங்கி பின்பு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால் கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...