கோவை தீத்திபாளையம் பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை வனத்துறை ஊழியரை தாக்கும் பதபதைக்க வைக்கும் வீடியோ..!

தீத்திபாளையம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



வன ஊழியரை தாக்கிய போது, அருகிலிருந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து, கூச்சலிட்டதால் அவரை விட்டுவிட்டு யானை அங்கிருந்து சென்றது. பின்னர் அவரை மீட்ட வனத்துறையினர், காயமடைந்த வன ஊழியரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், யானையிடம் சிக்கிய வன ஊழியர் மதுக்கரை வனச்சரகத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு வீரர் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது.



தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், அந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக ஓடி வருவதும், அந்த யானையைப் பொதுமக்கள் மொட்டை மாடியில் நின்றபடி அச்சத்தில் பார்த்து கூச்சலிடுவதும் பதிவாகியுள்ளது.



யாரும் எதிர்பாராத நேரத்தில், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு வீரர் நாகராஜை துதிக்கையால் தூக்கி வீசி அவரை தாக்கும் பதைபதைக்கும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் அந்த யானை ஊருக்குள் வந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கும் பேரூர் தீத்திபாளையம் பகுதி மக்கள், வனத்துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...