கோவை சென்னனூரை சேர்ந்த ஏ.பி.வி.பி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர் தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்தும் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை: இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட கோவையை சேர்ந்த ஏ.பி.வி.பி (ABVP) சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சென்னனூரை சேர்ந்த ஏ.பி.வி.பி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர் தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்தும் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். நீண்ட நேரத்துக்கு பிறகு, அந்த பதிவுகளை அவர் நீக்கியுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இரவோடு இரவாக கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.