கோவை விமான நிலையத்தில் தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு: தொழில் துறையினர் வரவேற்பு

கோவை விமான நிலையம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தினமும் இயக்கப்படும் எண்ணிக்கை இன்று, ஜூன் 14 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு என இரண்டையும் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: இரண்டு ஆண்டுகளுக்கு பின் கோவை விமான நிலையத்தில், தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது, தொழில் துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பு தினமும் 33 முதல் 36 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆண்டுதோறும் 30 லட்சம் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின், பயணிகள் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பிட்டு, சொல்ல வேண்டுமென்றால் சில நாட்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி திட்டம்,நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் என மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சியின் காரணமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சேவை அதிகரித்து வருகிறது.

அதன்படி, கோவை விமான நிலையத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. தினமும் இயக்கப்படும் எண்ணிக்கை இன்று, ஜூன் 14 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, உள்நாடு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவு என இரண்டையும் சேர்த்து 28 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து கொங்கு குளோபல் போரம்(KGF), இயக்குனர், டி.நந்தகுமார் கூறியதாவது:



கொரோனா நோய் தொற்று பரவலால் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் விமான போக்குவரத்தில் மிகப்பெரிய தாகத்தை ஏற்படுத்தியது. தற்போது, கோவை உட்பட அனைத்து விமான நிலையங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் தான். சுற்றுலா, தொழில், கல்வி, ஆன்மீக பயணம் என பல்வேறு காரணங்களுக்காக, கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, மேற்குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் காணப்படுகிறது.

இது, கோவை உட்பட ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியிலும் மிக பெரிய அளவில் பங்களிக்கும்", இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர், டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், பூனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...