பொள்ளாச்சி அருகே தனது 5 வயது குழந்தையுடன் மனைவியை காணவில்லை என்று கணவன் புகார் அளித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே தனது 5 வயது குழந்தையுடன் மனைவியை காணவில்லை என்று கணவன் புகார் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு (29), கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அபிமன்யுவின் மனைவி 5 வயது குழந்தையை எடுத்துக்கொண்டு காய்கறி வாங்கி வருவதாக கூறிச் சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும், மனைவி வீடு திரும்பாததால், அவரது உறவினர் வீட்டில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அபிமன்யு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காணாமல் போன பெண் மற்றும் 5 வயது குழந்தையை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு (29), கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அபிமன்யுவின் மனைவி 5 வயது குழந்தையை எடுத்துக்கொண்டு காய்கறி வாங்கி வருவதாக கூறிச் சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும், மனைவி வீடு திரும்பாததால், அவரது உறவினர் வீட்டில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அபிமன்யு பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காணாமல் போன பெண் மற்றும் 5 வயது குழந்தையை தேடி வருகின்றனர்.