பொள்ளாச்சி அருகே கண் பார்வையற்ற தம்பதியினருக்கு நிலத்தை தானமாக வழங்கிய தம்பதியினர்!

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் சேர்ந்த தம்பதியினர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை முறைப்படி கிரைய பத்திரம் எழுதி, ஆவணங்களை கொடுத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் சேர்ந்த தம்பதியினர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை முறைப்படி கிரைய பத்திரம் எழுதி, ஆவணங்களை கொடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராணி. இருவரும் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்கள். இவர்களுக்கு யுகபாரதி என்ற 5 வயது மகன் உள்ளார். இவர்கள் ஊதுபத்தி வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.



கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் நடத்திவரும் தங்கவேல், சுந்தரவள்ளி தம்பதியினர், கண் பார்வையற்ற தம்பதியினரை சந்தித்துள்ளனர். அவர்களின் நிலையறிந்து அவ்வப்போது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளனர்.

கண் பார்வையற்ற தம்பதியினரின் மகன் யுகபாரதி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் தேவராயபுரம் அன்பு நகர் பகுதியில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து, இன்று பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி கிரைய பத்திரம் எழுதி அவர்களிடம் ஆவணங்களை வழங்கினர்.

தங்களை, சந்தித்தது முதல் இன்று வரை பல உதவிகளை செய்துள்ளார்கள். தற்போது, எங்களுக்கு தானமாக 3.25 சென்ட் நிலத்தையும் வழங்கி, வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர் என்றும், அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பார்வையற்ற தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...