பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் சேர்ந்த தம்பதியினர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை முறைப்படி கிரைய பத்திரம் எழுதி, ஆவணங்களை கொடுத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற தம்பதியருக்கு சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் சேர்ந்த தம்பதியினர் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை முறைப்படி கிரைய பத்திரம் எழுதி, ஆவணங்களை கொடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராணி. இருவரும் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்கள். இவர்களுக்கு யுகபாரதி என்ற 5 வயது மகன் உள்ளார். இவர்கள் ஊதுபத்தி வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் நடத்திவரும் தங்கவேல், சுந்தரவள்ளி தம்பதியினர், கண் பார்வையற்ற தம்பதியினரை சந்தித்துள்ளனர். அவர்களின் நிலையறிந்து அவ்வப்போது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளனர்.
கண் பார்வையற்ற தம்பதியினரின் மகன் யுகபாரதி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் தேவராயபுரம் அன்பு நகர் பகுதியில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து, இன்று பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி கிரைய பத்திரம் எழுதி அவர்களிடம் ஆவணங்களை வழங்கினர்.
தங்களை, சந்தித்தது முதல் இன்று வரை பல உதவிகளை செய்துள்ளார்கள். தற்போது, எங்களுக்கு தானமாக 3.25 சென்ட் நிலத்தையும் வழங்கி, வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர் என்றும், அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பார்வையற்ற தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி ராணி. இருவரும் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்கள். இவர்களுக்கு யுகபாரதி என்ற 5 வயது மகன் உள்ளார். இவர்கள் ஊதுபத்தி வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த சுந்தர அங்காளம்மன் டிரஸ்ட் நடத்திவரும் தங்கவேல், சுந்தரவள்ளி தம்பதியினர், கண் பார்வையற்ற தம்பதியினரை சந்தித்துள்ளனர். அவர்களின் நிலையறிந்து அவ்வப்போது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளனர்.
கண் பார்வையற்ற தம்பதியினரின் மகன் யுகபாரதி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் தேவராயபுரம் அன்பு நகர் பகுதியில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 3.25 செண்ட் நிலத்தை தானமாக வழங்க முடிவு செய்து, இன்று பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி கிரைய பத்திரம் எழுதி அவர்களிடம் ஆவணங்களை வழங்கினர்.
தங்களை, சந்தித்தது முதல் இன்று வரை பல உதவிகளை செய்துள்ளார்கள். தற்போது, எங்களுக்கு தானமாக 3.25 சென்ட் நிலத்தையும் வழங்கி, வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளனர் என்றும், அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பார்வையற்ற தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.