கோவை - அன்னூர் நாச்சிபாளையம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்த காரணத்தால், அவசரம் கருதி அவருக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்சு மருத்துவ குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோவை: கோவை - அன்னூர் நாச்சிபாளையம் அருகே அவசரம் கருதி கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த 108 ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள பகுதி ஆம்போதி ஊராட்சி. ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி சரவணன் (25) மற்றும் துர்கா(23). இவர்களுக்கு திருமணமாகி இரு ஆண்டுகளான நிலையில் துர்கா கர்ப்பமாகியுள்ளார்.
இதனையடுத்து, நிறைமாத கர்ப்பிணியான துர்காவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவசர உதவி 108 எண்ணிற்கு சரவணா அழைத்துள்ளார்.
உடனே 108 ஊழியர்கள், நந்தகோபால், குமுதா உள்ளிட்டோர் விரைந்து வந்து நிறைமாத கர்ப்பிணியான துர்காவினை ஆம்புலன்சிஸ் ஏற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் நாச்சிபாளையம் அருகே வந்து கொண்டு இருந்த போது, துர்காவிற்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால், அவசரம் கருதி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடுவழியிலே வாகனத்தை நிறுத்தி, அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
சரியாக இன்று காலை 10.20 மணிக்கு, துர்காவிற்கு அழகான ஆண் குழந்தை 2 கிலோ 900 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. பின்னர், தாய், சேய் இருவரையும் முதலுதவி சிகிச்சைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்த காரணத்தால், அவசரம் கருதி அவருக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்சு ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.