உபி அரசை கலைக்க கோரி கோவை ரயில் நிலையம் முற்றுகை: தமுமுகவினர் கைது..!

உபி அரசை கலைக்க கோரி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தடையை மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.



கோவை: உபி அரசை கலைக்க கோரி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அண்மையில் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நுபுர் சர்மா உள்ளிட்ட அவதூறு கருத்துகளை தெரிவித்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை, மற்றும் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்தல் போன்ற ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வரும் உத்திரப்பிரதேசம் அரசை கண்டித்து உபி அரசை கலைக்க வலியுறுத்தி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.



அப்போது போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே சிலர் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை முற்றுகையிட முயன்றதால் உள்ளே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...