உபி அரசை கலைக்க கோரி கோவை ரயில் நிலையம் முற்றுகை: தமுமுகவினர் கைது..!

உபி அரசை கலைக்க கோரி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தடையை மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.



கோவை: உபி அரசை கலைக்க கோரி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அண்மையில் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நுபுர் சர்மா உள்ளிட்ட அவதூறு கருத்துகளை தெரிவித்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும், இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதில் உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை, மற்றும் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்தல் போன்ற ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வரும் உத்திரப்பிரதேசம் அரசை கண்டித்து உபி அரசை கலைக்க வலியுறுத்தி தமுமுகவினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர்.



அப்போது போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.



இதனிடையே சிலர் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை முற்றுகையிட முயன்றதால் உள்ளே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களையும் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...