திருப்பூர் பல்லடம் அருகே விற்பனைக்காக கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது..!

80-லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பல்லடம் அருகே விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பதுக்கி வைத்தது தெரியவந்தது.



திருப்பூர்: பல்லடம் அருகே விற்பனைக்காக கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு 80 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்ட அவினாசிபாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சின்னாரிபட்டி பகுதியில் உள்ள மைதானம் அருகே சோதனை மேற்கொண்டபோது பிளாஸ்டிக் கேனில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கலியமூர்த்தி(26), திருமூர்த்தி(19) ஆகியோரை கைது செய்து 80 லிட்டர் கள்ளச்சாரயத்தையும் அவினாசிபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.



மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து இங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து பதுக்கி வைத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...