கோவை குனியமுத்தூர் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்பு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மதுக்கரை சர்ச் காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் – சகாயராணி, தம்பதியின் மகள் சவுமியா (13). இவர், குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறந்த முதல் நாள், சிறுமி சவுமியா பள்ளியில் இருந்த போது 11 மணியளவில் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியர்கள் சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், மயங்கிய சிறுமியை பள்ளி ஆசிரியர்கள்,பள்ளியின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்து, மருத்துவமனைக்குபெற்றோர் வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென மாலை 4 மணிக்கு மேல் சிறுமிக்கு இதய துடிப்பு படிப்படியாக குறையத் துவங்கியதாக தெரிகிறது. ஆனால், அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுமி உயிரிழந்தாக கூறப்படுகிறது. 



இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறும் போது, சிறுமி எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று எங்களிடம் தெரிவிக்கவில்லை. சிறுமி பள்ளியில் இருப்பதாக தெரிவித்தனர். மீண்டும் அழைத்த போது தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறினார்கள்.

குழந்தைக்கு பிரச்சனை என்றால் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிருந்தால் மகளை காப்பாற்றியிருக்கலாம். மேலும், அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத்துள்ளனர் என்று 

குற்றம் சாட்டினர்.



இறந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியதால், குனியமுத்தூர் சரக உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா மற்றும் குனியமுத்தூர் போலீஸார் அங்கு வந்தனர். இதையடுத்து, உயிரிழந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

கோடை விடுமுறை முடிந்து, முதல் நாள் பள்ளிக்கு வந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...