வார்டு எண்.74, செல்வம்பதி, முத்தண்ணன் குளம் ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் குளத்தின் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.74, செல்வம்பதி, முத்தண்ணன் குளம் ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் குளத்தின் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.31.47 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி குளம் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, மாநகராட்சி மேற்கு மண்டலம் கிருஷ்ணம்பதி ஏரி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.19.36 கோடி மதிப்பீட்டில் குளத்தின் புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

உடன் மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், 74-வது மாமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.சங்கர், செயற்பொறியாளர் (Jnnurm) பி.உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் சத்யா, சவிதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.