கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: ஆணையாளர் ஆய்வு..!

வார்டு எண்‌.74, செல்வம்பதி, முத்தண்ணன்‌ குளம்‌ ஏரியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.31.25 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை ஆணையாளர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்றுவரும்‌ வளர்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.74, செல்வம்பதி, முத்தண்ணன்‌ குளம்‌ ஏரியில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.31.25 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர், மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வசிந்தாமணி குளம்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.31.47 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்,‌ மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி குளம்‌ சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இதனிடையே,‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ கிருஷ்ணம்பதி ஏரி சீர்மிகு நகர திட்டத்தின்கீழ்‌ ரூ.19.36 கோடி மதிப்பீட்டில்‌ குளத்தின்‌ புனரமைப்புப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, துரிதமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



உடன்‌ மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சரவணன்‌, 74-வது மாமன்ற உறுப்பினர்‌ ஏ.எஸ்‌.சங்கர்‌, செயற்பொறியாளர்‌ (Jnnurm) பி.உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ சத்யா, சவிதா மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...