கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2-பேர் கைது-3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!

கேரளாவுக்கு கடத்த முயற்சித்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசியை கொண்டு செல்ல முயன்ற இருவரை கைது செய்தனர்.


கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை கைது செய்து 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களை தடுக்க, பொள்ளாச்சியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் வடவள்ளி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று வடவள்ளி ரோடு பேரூர் மேம்பாலம் சந்திப்பு அருகில், ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் வாகன தணிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 50-கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் சுமார் 3000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.



இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி (28) மற்றும் இயேசுராஜ் (49) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவையைச் சேர்ந்த முனீஸ் என்பவர் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்லுமாறு அனுப்பி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, கேரளாவுக்கு கடத்த முயற்சித்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தைபறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற இருவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள முனீஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...