விவசாயி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (61). இவருக்கு, சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
வழக்கமாக காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொண்ட பின்னர், தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க மோட்டார் அறைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற செந்தில்குமார் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் விவசாய நிலத்தில் தேடிப் பார்த்தனர்.
அப்போது, கிணற்றில் செந்தில்குமார் உடமைகள் சில மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் கிணற்றில் இறங்கி சோதனை செய்தபோது, செந்தில் குமாரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நீச்சல் தெரியாத செந்தில்குமார் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (61). இவருக்கு, சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
வழக்கமாக காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொண்ட பின்னர், தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க மோட்டார் அறைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற செந்தில்குமார் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் விவசாய நிலத்தில் தேடிப் பார்த்தனர்.
அப்போது, கிணற்றில் செந்தில்குமார் உடமைகள் சில மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பொள்ளாச்சி தீயணைப்புத் துறைக்கு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற தீயணைப்புத்துறை மற்றும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் கிணற்றில் இறங்கி சோதனை செய்தபோது, செந்தில் குமாரின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீச்சல் தெரியாத செந்தில்குமார் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.