ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி, 3.55 விநாடிகளில் இவர் செய்த இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கோவை: பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் நிறைமாத கர்ப்பிணி பறை இசைத்து 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். பல்வேறு கிராமிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரகலட்சுமி. கிராமிய கலைகளில் ஆர்வமுடைய இவர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனை பிரிவு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும், பறை இசைத்து, 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

சாதனையின் போது, ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி, 3.55 விநாடிகளில் இவர் செய்தஇந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை குறித்து நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில், தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகபடுத்தும் விதமாக சட்ட பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும், என்னைப் போன்ற அப்பா இல்லாத பெண்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பாவை போன்று பாதுகாப்பு தர வேண்டும்,என கண்ணீர் மல்க கூறினார்.


கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். பல்வேறு கிராமிய கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறார். இவரது மனைவி பிரகலட்சுமி. கிராமிய கலைகளில் ஆர்வமுடைய இவர், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் நாடு முழுவதும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், இந்த குற்றங்களுக்கான தண்டனை பிரிவு சட்டத்தை கடுமையாக்க வலியுறுத்தியும், பறை இசைத்து, 30 டியூப் லைட்டுகளின் மீது நடந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
சாதனையின் போது, ஒவ்வொரு லைட்டையும் கால்களால் உடைத்தபடி, 3.55 விநாடிகளில் இவர் செய்தஇந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை குறித்து நிறைமாத கர்ப்பிணியான பிரகலட்சுமி கூறுகையில், தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தண்டனைகளை அதிகபடுத்தும் விதமாக சட்ட பிரிவில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும், என்னைப் போன்ற அப்பா இல்லாத பெண்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்பாவை போன்று பாதுகாப்பு தர வேண்டும்,என கண்ணீர் மல்க கூறினார்.