மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கோவையில் சிபிஐஎம், விசிக கட்சியினர் சாலை மறியல்

ஜல்லிக்கட்டு மீதான தடையினை நிரந்தரமாக நீக்கக் கோரி கோவையில் நடைபெற்று வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் மீதும் கொடூரமான கொலைவெறித் தாக்குதல் நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



மேலும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதனைத்தொடர்ந்து, அமைதியான முறையில் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்து கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய மாணவர் சங்கத்தினர் ஒன்றிணைந்து காந்திபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கட்சியினருடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மீண்டும் மாணவர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...