கோவையில் 2 ஆண்டுகளுக்கு பின் அரசு பொருட்காட்சி இன்று முதல் துவக்கம்….!

கோவை மத்திய சிறை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சுவாமிநாதன் துவக்கி வைத்தனர்.


கோவை: கோவை மத்திய சிறை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சுவாமிநாதன் துவக்கி வைத்தனர்.



கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு பொருகாட்சியை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்து, பார்வையிட்டனர்.



இந்த பொருட்காட்சி, காலை 10 முதல் இரவு 10 மணி வரை, 45 நாட்கள் நடைபெற உள்ளது.



பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இப்பொருட்காட்சியில் செய்தி - மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளிட்ட 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.



மேலும், கோவை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் 4 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், தோட்டக்கலை சார்பில் காய்கறிகளை கொண்டு மீன், கிட்டார் வடிவங்களை உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் கூறும் போது: கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பொருட்காட்சி நடைபெறவில்லை. தற்போது, பொருட்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருட்காட்சி அரங்கில் போதுமான அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...