ரூ.36-ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கோவையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான மதுக்கரை போலீசார் கோவை பாலக்காடு நெடுஞ்சாலை செட்டிபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களின் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த (எக்ஸ்எல் சூப்பர்) இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ரூ.36 ஆயிரம் மதிப்பிலான 912 கேரளா லாட்டரிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட நபர் தூத்துக்குடி மாவட்டம் தான்வில்லை சேர்ந்த விஜயன் (56). என்பது தெரியவந்தது.
மேலும் அவர் வாளையாறு பகுதியில் உள்ள லாட்டரி விற்பனை கடையிலிருந்து லாரிகளை வாங்கி வந்து, கோவை மாநகர் பகுதியில் கணபதி, தண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.36-ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கோவையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான மதுக்கரை போலீசார் கோவை பாலக்காடு நெடுஞ்சாலை செட்டிபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களின் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த (எக்ஸ்எல் சூப்பர்) இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ரூ.36 ஆயிரம் மதிப்பிலான 912 கேரளா லாட்டரிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட நபர் தூத்துக்குடி மாவட்டம் தான்வில்லை சேர்ந்த விஜயன் (56). என்பது தெரியவந்தது.
மேலும் அவர் வாளையாறு பகுதியில் உள்ள லாட்டரி விற்பனை கடையிலிருந்து லாரிகளை வாங்கி வந்து, கோவை மாநகர் பகுதியில் கணபதி, தண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.36-ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.