கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் - தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது..!

ரூ.36-ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை, கேரளாவில் இருந்து வாங்கி வந்து சட்டவிரோதமாகக் கோவையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான மதுக்கரை போலீசார் கோவை பாலக்காடு நெடுஞ்சாலை செட்டிபாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களின் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த (எக்ஸ்எல் சூப்பர்) இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் ரூ.36 ஆயிரம் மதிப்பிலான 912 கேரளா லாட்டரிகள் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, வாகனத்தில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட நபர் தூத்துக்குடி மாவட்டம் தான்வில்லை சேர்ந்த விஜயன் (56). என்பது தெரியவந்தது.

மேலும் அவர் வாளையாறு பகுதியில் உள்ள லாட்டரி விற்பனை கடையிலிருந்து லாரிகளை வாங்கி வந்து, கோவை மாநகர் பகுதியில் கணபதி, தண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.36-ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...