கோவை வால்பாறையில் மக்கள் தொடர்பு முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

வால்பாறையில் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 281-பயனாளிகள் பயனடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக கடந்த மூன்று முறை வால்பாறை பகுதியில் சார் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இன்று நடக்கும் முகாமில் பொது மக்களுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று இந்த முகாம் அறிவிக்கப்பட்டது.

இன்று நடக்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என்று பொது மக்களுக்கு அறிவிப்புகள் வட்டாட்சியர் அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் வரவில்லை அதற்குப் பதிலாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் முகாம் நடைபெற்றது.



வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இட வசதியின்றி பொதுமக்கள் நெருக்கமாகக் கூடிநின்று முகாமில் கலந்து கொண்டனர். சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதில் 23 லட்சத்து 28 ஆயிரத்து 990 மதிப்பில் நிவாரணம் வழங்கப்பட்டது 281-பயனாளிகள் பயன் பெற்றனர்.



இதில் இஸ்திரி பெட்டி 10 தையல் மிஷின் 3, முதியோர் உதவி தொகை 108, இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் 18, குடும்ப அட்டை 15, மகளிர் உதவி தொகை 2, வனத்துறை சார்பாக வனவிலங்கு தாக்கி காயம் அடைந்தவர்கள் 3, ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு மகளிர் உதவி தொகை மற்றும் தென்னை மரக்கன்றுகள் வழங்கி முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடத்தில் இருந்து பெறப்பட்டது. இதில் சாலை வசதி குடிநீர் வசதி வீட்டுமனைப்பட்டா மாற்றுத் திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கு ஓய்வூதியம் போன்றவை வழங்க வேண்டும் என்று மனுக்கள் தரப்பட்டது.

இக்கூட்டத்தில் வால்பாறை மன்ற உறுப்பினர் அமுல் காந்த சாமி, வட்டாட்சியர் விஜயகுமார், துணை வட்டாட்சியர் ஜெகதீஷ், நகராட்சி ஆணையாளர் பாலு வனத்துறை அதிகாரி மணிகண்டன், வெங்கடேஷ், மற்றும் அனைத்து அரசு துறை அதிகரிக்கக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...