கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலங்களை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவை நகர் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு 238 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம், கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம், உதகை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போக்குவரத்துக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 60 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.
கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி ஆர் நடராஜன், சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், அம்மன் அர்ஜுனன், கேஆர்.ஜெயராமன், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
கவுண்டம்பாளையம் பகுதி மேம்பால திறப்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.