கோவை கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்..!

கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் மற்றும் சுங்கம் மேம்பாலங்களை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.



கோவை நகர் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு 238 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம், கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம், உதகை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போக்குவரத்துக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 60 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.



கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி ஆர் நடராஜன், சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், அம்மன் அர்ஜுனன், கேஆர்.ஜெயராமன், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.



கவுண்டம்பாளையம் பகுதி மேம்பால திறப்பில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...