கோவையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்; உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது..!

கோவைப்புதூரில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் தலைமை காவலர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இறுதியாண்டு படிக்கும் தனியார் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, தகவலறிந்து அங்கு சென்ற குனியமுத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சின்ராஜ் மற்றும் தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று மாணவர்களை தடுக்க முயன்றனர்.

அப்போது, அங்கிருந்த மாணவர்கள் தப்பிச் சென்ற போது, தலைமை காவலர் திருநாவுக்கரசு மீது இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக, சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் விக்னேஷ் (26) என்ற இளைஞரை கைது செய்தனர்.

விசாரணையில் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரது நண்பர் ஒருவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், மாணவர்களிடையே மூன்று நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்ட போது, ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக மாச்சப்பாளையத்தை சேர்ந்த ஜெகன் என்பவருடன் சென்ற விக்னேஷ், போலீசாரிடம் சிக்காமல் இருக்க காவலர் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து விக்னேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...