கோவையில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு!

கோவையில் சூலூர் அருகே உள்ள குளத்தூரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் சூலூர் அருகே உள்ள குளத்தூரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (32). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ரகுபதி கோவை சூலூர் அருகே உள்ள குளத்தூரில் அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் காலை பணிக்குச் சென்ற ரகுபதி அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை இயக்கியதாக தெரிகிறது. அப்போது அட்டைகளை வைத்து அடுக்கிக் கொண்டிருந்த போது திடீரென இயந்திரம் செயல்பட தொடங்கியுள்ளது.

இதில் அவரது தலை உள்ளே சிக்கிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் இயந்திரத்தை நிறுத்த முயன்றனர்.



ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சூலூர் போலீசார் ரகுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரகுபதி சிக்கி உயிரிழந்த அட்டைப்பெட்டி செய்யும் இயந்திரம் கடந்த சில மாதங்களாகவே பழுதாகி இருந்ததாகவும், அடிக்கடி இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்ட அட்டைப்பெட்டி நிறுவனத்தின் உரிமையாளர் மீது சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...