சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ். இவர் பீளமேடு விகே சாலை ஜீவா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று லியோ மரியா இருதயராஜ் தனது அலுவலகத்தில் இருந்த போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான இடைத்தரகர் ரவிக்குமார் என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரவிக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடு கத்தியால் லியோ மரியா இருதயராஜ் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் இருதயராஜ் படுகாயமடைந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ரூ.82 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். லியோ மரியா இருதயராஜ் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருதயராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச்சென்ற ரவிக்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
முதல்கட்டமாக துவங்கிய விசாரணையில் ரவிக்குமார் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள, நிலையில் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.
கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ். இவர் பீளமேடு விகே சாலை ஜீவா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று லியோ மரியா இருதயராஜ் தனது அலுவலகத்தில் இருந்த போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான இடைத்தரகர் ரவிக்குமார் என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரவிக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடு கத்தியால் லியோ மரியா இருதயராஜ் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் இருதயராஜ் படுகாயமடைந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ரூ.82 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். லியோ மரியா இருதயராஜ் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருதயராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச்சென்ற ரவிக்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
முதல்கட்டமாக துவங்கிய விசாரணையில் ரவிக்குமார் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள, நிலையில் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.