கோவையில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை…!

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ். இவர் பீளமேடு விகே சாலை ஜீவா நகர் பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று லியோ மரியா இருதயராஜ் தனது அலுவலகத்தில் இருந்த போது, அவருக்கு ஏற்கனவே பழக்கமான இடைத்தரகர் ரவிக்குமார் என்பவர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ரவிக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆக்ஸா பிளேடு கத்தியால் லியோ மரியா இருதயராஜ் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் இருதயராஜ் படுகாயமடைந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ரூ.82 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். லியோ மரியா இருதயராஜ் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் இருதயராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ரூ.82 லட்சம் பணத்துடன் தப்பிச்சென்ற ரவிக்குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

முதல்கட்டமாக துவங்கிய விசாரணையில் ரவிக்குமார் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள, நிலையில் தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...